என் மலர்
நீங்கள் தேடியது "ராணுவ வீரர் தற்கொலை"
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் பட்டான் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில் இருந்த பாட்டினி திரிபாதிராவ் என்ற ராணுவ வீரர் நேற்று காலை திடீரென்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது பாட்டினி திரிபாதி ராவ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. அதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோழவந்தான் அருகே உள்ள வடகாடுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 42). ராணுவ வீரரான இவர் செகந்திராபாத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முனியாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முனியாண்டி திடீரென்று இந்த பரிதாப முடிவை தேடிக்கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. முனியாண்டியின் மரணம் குறித்து வடகாடு பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஜோதி முத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முனியாண்டி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43). ராணுவ வீரரான இவர் காஷ்மீரில் உரி என்ற இடத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 35 நாள் விடுமுறையில் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அவரது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு குமாருக்கும், அவரது மனைவி அமுதாமைவிற்கும் (29) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அமுதாமை அவரது தாய் வீடான ஆதனூருக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் குமார் மன உளைச்சலுடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குமார் தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள வேப்ப மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நேற்று காலை அந்த வழியாக மாடு மேய்க்க சென்ற பாஸ்கரன் என்பவர் குமார் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த குமாருக்கு திலகவதி (9), ஹரிணி (7) என 2 மகள்கள் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கண்ட மங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(வயது 28) ராணுவ வீரர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து கொண்டு கண்டமங்கலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்திருந்தார்.
வீட்டுக்கு வந்த அவர் யாருடனும் பேசாமல் சோகமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த தமிழரசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றவர்கள் வீட்டுக்கு வந்தபோது தமிழரசன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து காட்டு மன்னார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய தமிழரசனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராணுவ வீரர் தமிழரசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






