என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்டுமன்னார் கோவில் அருகே ராணுவ வீரர் தற்கொலை
Byமாலை மலர்1 Sep 2018 9:52 AM GMT (Updated: 1 Sep 2018 9:52 AM GMT)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ முஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கண்ட மங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(வயது 28) ராணுவ வீரர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து கொண்டு கண்டமங்கலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்திருந்தார்.
வீட்டுக்கு வந்த அவர் யாருடனும் பேசாமல் சோகமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த தமிழரசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றவர்கள் வீட்டுக்கு வந்தபோது தமிழரசன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து காட்டு மன்னார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய தமிழரசனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராணுவ வீரர் தமிழரசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கண்ட மங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(வயது 28) ராணுவ வீரர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து கொண்டு கண்டமங்கலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்திருந்தார்.
வீட்டுக்கு வந்த அவர் யாருடனும் பேசாமல் சோகமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த தமிழரசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றவர்கள் வீட்டுக்கு வந்தபோது தமிழரசன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து காட்டு மன்னார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய தமிழரசனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராணுவ வீரர் தமிழரசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X