செய்திகள்
பெண் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பால் தேனியைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு

Published On 2020-04-04 12:59 GMT   |   Update On 2020-04-04 12:59 GMT
கொரோனா பாதிப்பால் தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
தேனி:

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு எச்சரித்து வருகிறது. ஊரடங்கு தடை உத்தரவை மீறியும் சிலர் அலட்சியமாக செயல்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட தேனியைச் சேர்ந்த 53 வயது பெண் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் வண்டிமேடு சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று காலை இறந்தார். ஏற்கனவே மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை தமிழகத்தில் 3 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News