செய்திகள்
பாபநாசம் அருகே புளியமரத்தில் தீவிபத்து
பாபநாசம் அருகே 30 அடி உயரமுள்ள புளியமரத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படைவீரர்கள் போராடி அணைத்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் ஒன்றியம் திருவைகாவூர் ஊராட்சியில் மெயின்ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 30 அடி உயரமுள்ள புளியமரம் ஒன்று இருந்தது. இந்த புளியமரத்தில் உள்ள பொந்திலிருந்து திடீரென தீ பிடித்து மளமளவென எரிந்தது.
இதுகுறித்து அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் ராமவிஜயன் பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து புளியமரத்தில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.
பாபநாசம் ஒன்றியம் திருவைகாவூர் ஊராட்சியில் மெயின்ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 30 அடி உயரமுள்ள புளியமரம் ஒன்று இருந்தது. இந்த புளியமரத்தில் உள்ள பொந்திலிருந்து திடீரென தீ பிடித்து மளமளவென எரிந்தது.
இதுகுறித்து அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் ராமவிஜயன் பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து புளியமரத்தில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.