செய்திகள்
இந்தோனேசியா விமானி உள்பட குடும்பத்தினர் 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை
புதுத்தெருவை சேர்ந்த இந்தோனேசியா விமானி உள்பட குடும்பத்தினர் 5 பேர்களையும் மருத்துவ பரிசோதனை செய்தவதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாபநாசம்:
பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை புதுத்தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் இந்தோனேசியாவில் பைலட்டாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவரது மனைவி யூஸ்ரா, தந்தையார் முகமது ஜமீன், தாயார் சுமைதாபேகம், மற்றும் ராஜகிரியை சேர்ந்த முக்சித்பின் ஆகிய 5 பேரும் ஊர் திரும்பியிருந்தனர்.
இந்நிலையில் பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் விஜயலெட்சுமி ஆகிய 5 பேர்களையும் மருத்துவ பரிசோதனை செய்தவதற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.