செய்திகள்
தற்கொலை

சிங்காநல்லூரில் பள்ளி ஆசிரியை வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2020-03-30 10:40 GMT   |   Update On 2020-03-30 10:40 GMT
சிங்காநல்லூரில் பள்ளி ஆசிரியை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிங்காநல்லூர்:

கோவை ஒண்டிபுதூர் அருகில் உள்ள தாகூர் நகரை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மனைவி இசைவாணி (வயது 52). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார். இவர்களுக்கு மகள் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் இசைவாணி கடந்த சில நாட்களாகவே மன வருத்தத்துடன் இருந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென சாணிபவுடரை குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது கணவர் மனைவியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News