செய்திகள்
தஞ்சை அருகே மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல்
தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் கடத்தி வரப்பட்ட 9 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வடகால் புறவழிச்சாலையில் நேற்று அதிகாலை கள்ளப்பெரம்பூர் சப்இன்ஸ்பெக்டர் அஃபானா அஞ்சும் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அருகில் இருந்த வெண்ணாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் சிலர் அனுமதியின்றி மணலை ஏற்றிக்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து வடகால் பாலம் அருகே போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
போலீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்தி விட்டு மணலை கடத்தி வந்த 9 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் அஃபானா அஞ்சும் மற்றும் போலீசார் தப்பி ஒடிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மணல் கடத்தி வரப்பட்ட 9 மாட்டு வண்டிகளையும் மணலுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சையை அடுத்துள்ள வடகால் புறவழிச்சாலையில் நேற்று அதிகாலை கள்ளப்பெரம்பூர் சப்இன்ஸ்பெக்டர் அஃபானா அஞ்சும் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அருகில் இருந்த வெண்ணாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் சிலர் அனுமதியின்றி மணலை ஏற்றிக்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து வடகால் பாலம் அருகே போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
போலீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்தி விட்டு மணலை கடத்தி வந்த 9 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் அஃபானா அஞ்சும் மற்றும் போலீசார் தப்பி ஒடிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மணல் கடத்தி வரப்பட்ட 9 மாட்டு வண்டிகளையும் மணலுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.