செய்திகள்
தர்மபுரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்தனமாக மதுவிற்ற 3 பேரை கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் கள்ளத்தனமாக மதுவிற்பவர்களை கைது செய்ய ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரும்பாலை போலீசார் அதேபகுதியை சேர்ந்த பழனி (வயது 66) மற்றும் சக்திவேல் (33) என்பவர்களை அரசுக்குப் புறம்பாக மதுவிற்றதன் பேரில் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று பஞ்சப்பள்ளி போலீசார் நடத்திய சோதனையில் அதேபகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் அரசுக்கு புறம்பாக மதுவிற்றதன் பேரில் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் இவர்களிடமிருந்து 96 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.