செய்திகள்
அருப்புக்கோட்டையில் செல்போன் டவரில் தீ விபத்து
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள செல்போன் டவரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சில பகுதிகளுக்கு பி.எஸ்.என்.எல். இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி மதுரை சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இதன் மாடியில் 2 செல்போன் டவர்கள் உள்ளன. இதில் 100 அடி உயரத்திற்கும் மேலான பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் உள்ளது.
இந்த டவரில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கோபுரத்தின் அடி பகுதியில் இருந்து மேல்நோக்கி தீ பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் அந்த கோபுரம் சேதம் அடைந்தது. இதனால் சில பகுதிகளுக்கு பி.எஸ்.என்.எல். இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி மதுரை சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இதன் மாடியில் 2 செல்போன் டவர்கள் உள்ளன. இதில் 100 அடி உயரத்திற்கும் மேலான பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் உள்ளது.
இந்த டவரில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கோபுரத்தின் அடி பகுதியில் இருந்து மேல்நோக்கி தீ பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் அந்த கோபுரம் சேதம் அடைந்தது. இதனால் சில பகுதிகளுக்கு பி.எஸ்.என்.எல். இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.