செய்திகள்
தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

Published On 2020-03-24 17:07 GMT   |   Update On 2020-03-24 17:07 GMT
திருச்சி அருகே திருமணமாகாத விரக்தியில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் தொட்டியம் கொளக்குடி கருப்பணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவருக்கு திருமணமாக வில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் இன்று காலை  அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் செந்தில்குமார் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகாத விரக்தியில் செந்தில்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News