செய்திகள்
கள்ளிக்குடி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வில்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த முத்துராமலிங்கம் (23) என்ற வாலிபரை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் 75 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புளியங்குளம் சாலையில் முனியாண்டிபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரையும் மடக்கி போலீசார் சோதனை நடத்தியதில் அவரிடம் இருந்து 48 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
மது பாட்டில்களை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்து ராமலிங்கம், கணேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வில்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த முத்துராமலிங்கம் (23) என்ற வாலிபரை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் 75 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புளியங்குளம் சாலையில் முனியாண்டிபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரையும் மடக்கி போலீசார் சோதனை நடத்தியதில் அவரிடம் இருந்து 48 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
மது பாட்டில்களை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்து ராமலிங்கம், கணேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.