செய்திகள்
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு- வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள்
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கனவே, 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயது முதியவர் மற்றும் 52 வயது பெண், சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய 25 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முறையே சென்னை போரூர், புரசைவாக்கம், கீழ்கட்டளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் மூவரின் உடல்நிலையும் சீராக உள்ளது.’ என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.