செய்திகள்
மதுரை ரைஸ்மில் அதிபரிடம் ரூ.33 லட்சம் மோசடி
மதுரையில் ரைஸ்மில் அதிபரிடம் பணம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை சிந்தாமணி, ராஜமான் நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் அதே பகுதியில் ரைஸ்மில் நடத்தி வருகிறார்.
இவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த அரிசி வியாபாரி செந்தில்குமார் ரூ. 41 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான அரிசி மூடைகளை வாங்கினார்.
இதில் ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்தை செலுத்தினார். மீதி பணம் 33 லட்சத்து 9 ஆயிரத்தை செலுத்தவில்லை. பலமுறை சந்திர மோகன் கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லை.
இது குறித்து சந்திரமோகன் மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ரூ. 33 லட்சம் மோசடி செய்த செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை சிந்தாமணி, ராஜமான் நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் அதே பகுதியில் ரைஸ்மில் நடத்தி வருகிறார்.
இவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த அரிசி வியாபாரி செந்தில்குமார் ரூ. 41 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான அரிசி மூடைகளை வாங்கினார்.
இதில் ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்தை செலுத்தினார். மீதி பணம் 33 லட்சத்து 9 ஆயிரத்தை செலுத்தவில்லை. பலமுறை சந்திர மோகன் கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லை.
இது குறித்து சந்திரமோகன் மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ரூ. 33 லட்சம் மோசடி செய்த செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.