செய்திகள்
கொலை

ஆர்.எஸ்.மங்கலம் அருகே குப்பை கொட்டச் சென்ற பெண் கழுத்தை நெரித்து கொலை

Published On 2020-03-17 09:52 GMT   |   Update On 2020-03-17 10:05 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.மங்கலம்:

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் அருகேயுள்ள ஓடக்கரை கிராமத்தை சேர்ந்தவர் காஞ்சனா (39).

இவர் சம்பவதன்று காலை வீட்டில் உள்ள குப்பையை கொட்டுவதற்காக அருகேயுள்ள குப்பை மேட்டிற்கு சென்றார்.

நீண்ட நேரமாகியும் காஞ்சனா வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி சென்று பார்க்கும் போது ஓடக்கரை அருகேயுள்ள ஆனந்தூர் கண்மாயின் கரைப்பகுதியில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் ஆர்.எஸ்.மங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், திருவாடானை துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News