செய்திகள்
மாயம்

தர்மபுரியில் செவிலியர் மாயம்

Published On 2020-03-15 14:33 GMT   |   Update On 2020-03-15 14:33 GMT
தர்மபுரியில் செவிலியர் மாயமானது தொடர்பாக அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள பூனாத்தன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் ரூபா தேவி (வயது 23). இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அவர் படித்து முடித்த கல்லூரியில் மாற்று சான்றிதழ் வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தும் ரூபா தேவி கிடைக்கவில்லை. 

இது குறித்து ராஜமாணிக்கம் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் எனது மகள் காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு மாயமான அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News