செய்திகள்
தஞ்சை அருகே அரசு பெண் ஊழியரிடம் 10 பவுன் நகை பறிப்பு
தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே பெண் உதவிப்பொறியாளரிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை மாதாகோட்டை சாலையைச் சேர்ந்தவர் சத்தியபாமா (வயது48).இவர் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப்பணியாற்றிவருகிறார். இவர் நேற்றுமுன்தினம் தஞ்சை அயோத்தி பட்டிசாலையில் தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் முகவரி குறித்து சத்யபாமாவிடம் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது இருவரும் திடீரென சத்தியபாமா கழுத்தில் இருந்த 10 பவுன்தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சத்தியபாமா கொடுத்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.