செய்திகள்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையில் ஆண்டுக்கு 250 நாள் ஆக்க வேண்டும். தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். மத்திய ஒருங்கிணைந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். 100 நாள் வேலையில் ஊழல்நிதி முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.