search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய தொழிலாளர் சங்கம்"

    • மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஊத்துக்குளி:

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    இதில் குடியிருக்க இடம் இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா உடனே வழங்க வேண்டும், காலி இடம் இருந்தும் சொந்த வீடு கட்ட இயலாத ஏழை மக்களுக்கு ரூ. 10 லட்சம் செலவில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், கிராமப்புறங்களில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் , தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் தொடர்ந்து வேலை வழங்கிட வேண்டும், சட்டபூர்வமான தினக்கூலி ரூ.294-ஐ முழுமையாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஊத்துக்குளி தாலுகா தலைவர் ஆர்.மணியன் தலைமை தாங்கினார்.கே.எஸ்.கருப்புசாமி, வேலுச்சாமி, நந்தகுமார், நாகராஜ், செல்வன், விஜயன், குமாரசாமி, செல்வி, நடுப்பட்டி பழனிச்சாமி, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் ஆர்.குமார், ஏ.சண்முகம், எஸ்.கே.கொளந்தசாமி, க.பிரகாஷ், காமராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முடிவில் பழனிச்சாமி நன்றி கூறினார்.

    ×