செய்திகள்
கைது

கிருஷ்ணராயபுரம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Published On 2020-03-09 16:40 GMT   |   Update On 2020-03-09 16:40 GMT
கிருஷ்ணராயபுரம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லாலாப் பேட்டை:

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமலைப்பட்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் பிச்சம்பட்டி வாய்க்கால் கரை பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தலைமை காவலர்கள் மகாமுனி, பிரபாகரன் , சிரஞ்சீவியை பிடித்து விசாரித்தனர். 

அப்போது அவர் நாட்டு துப்பாக்கியை வேட்டைக்காக வாங்கிவந்து உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை மாயனூர் காவல்துறையிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாட்டு துப்பாக்கி உரிமம் கடந்த 2017ம் ஆண்டு முடிவடைந்துள்ளது. அதன்பிறகு துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கவில்லை. 

இதையடுத்து அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, 100 கிராம் பால்ரஸ் குண்டு, 100 கிராம் கருப்பு மருந்து, 10 கிராம் தீக்குச்சி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News