செய்திகள்
போராட்டம்

மண்ணச்சநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம்

Published On 2020-03-09 13:43 GMT   |   Update On 2020-03-09 13:43 GMT
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மண்ணச்சநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மண்ணச்சநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் ஜமாத் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மண்ணச்சநல்லூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அபுபக்கர், மண்ணச்சநல்லூர் காந்திநகர் முகம்மதியா பள்ளிவாசல் துணைத்தலைவர் முகம்மது இப்ராஹிம் ஆகியோர் தலைமை வகித்தனர். பேராசிரியர் அருணன், த.மு.மு.க. தலைமை கழக பேச்சாளர் பாரூக், மாநில பொருளாளர் சபி யுல்லாகான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் சபிபுல்லா, மனிதநேய மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல்மாலிக், முகம்மது யூசுப், ஜவஹர், மவுலானா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News