செய்திகள்
கைது

8 ஆடுகள் திருடிய வாலிபர் கைது

Published On 2020-03-09 10:32 GMT   |   Update On 2020-03-09 10:32 GMT
2 பேரின் வீட்டில் இருந்து 8 ஆடுகளை திருடியதாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் ஜெயபாலை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

நாகமலை புதுக்கோட்டையை அடுத்த சம்பக்குடியைச் சேர்ந்தவர் அழகு மணி (வயது 59). இவர் வீட்டின் முன்பு 3 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அடுத்த நாள் பார்த்தபோது 3 ஆடுகளை காணவில்லை.

இதே போல நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி முத்துமாரி (45). இவர் தனது வீட்டின் முன்பாக 5 ஆடுகளை கட்டி வைத்து இருந்தார். அடுத்த நாள் பார்த்தபோது அந்த ஆடுகளையும் காணவில்லை.

இது தொடர்பாக அழகு மணி, முத்துமாரி ஆகிய 2 பேரும் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் ஜெயபால் (48) என்பவரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் அழகுமணி, முத்துமாரி ஆகிய 2 பேரின் வீட்டில் இருந்து அவர் 8 ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அழகுமணி, முத்துமாரி ஆகிய 2 பேரின் வீட்டில் இருந்து 8 ஆடுகளை திருடியதாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் ஜெயபாலை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News