என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stealing goats"

    • சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
    • கைதான 13 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் செல்வம் மகன்கள் மணிகண்டன் (வயது 30), சிவசங்கரன் என்ற விக்னேஷ் (25). இதில் மணிகண்டன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    விக்னேஷ் கல்லம்பட்டியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவகங்கை அருகே அழகமா நகரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில், அப்பகுதியை சேர்ந்த சிலர் தொலைந்து போன மாடு ஒன்றை தேடி சென்றுள்ளனர்.

    அப்போது அப்பகுதியில் ஆடு, கோழி சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசை நோக்கி சென்றபோது, தோப்பிற்குள் மணிகண்டன், விக்னேஷ் இருவரும் இருந்துள்ளனர். இதையடுத்து மாட்டை தேடி சென்றவர்கள் மற்றும் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி கிராம மக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் ஆடு, கோழி திருட வந்ததாக கூறி பயங்கரமாக தாக்கினர்.

    தப்பித்து ஓட முயற்சி செய்தபோது, மேலும் பலமாக தாக்கியதில் இருவரும் சுருண்டு கீழே விழுந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் சிறிது நேரத்தில் இறந்தனர். ஆடு, கோழி திருட வந்ததாக தவறாக எண்ணி தாக்கப்பட்டனரா? அல்லது முன்பகை காரணமா? என்பது குறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (45), சேமராஜ் (31), பிரபு (30), தீபக் (19), விக்னேஸ்வரன் (31), தினேஷ் (31) உள்ளிட்ட 6 பேரை முதற்கட்டமாக போலீசார் நேற்று கைது செய்தனர்.

    தொடர்ந்து விசாரணையில் வினோத் (34), பிரவீத் (24), அருண் பாண்டி (29), யுவராஜ் (22), அரவிந்த் (25), மணிகண்டன் (31), சீமான் (43) ஆகியோரை இன்று போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் அண்ணன், தம்பி கொலை வழக்கில் மொத்தம் 13 பேர் கைதாகி உள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர்கள் மீது கடந்த 2015-ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலவளவு போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டில் கட்டியிருந்த ஆட்டுகிடாவை கடந்த மார்ச் 25-ந்தேதி காணவில்லை.
    • ஆட்டுகிடாவை அறுத்து இறைச்சியாக விற்பனை செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் மருதுபாண்டியன்(40). இவர் ஆட்டுகிடாவை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டுகிடாவை கடந்த மார்ச் 25-ந்தேதி காணவில்லை. இதுதொடர்பாக இவர் கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணி வழக்குபதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்தார். அதன்பேரில் தமிழன், விஜய், ஜெயபிரகாஷ் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தார். மேலும் ஆட்டுகிடாவை அறுத்து இறைச்சியாக விற்பனை செய்த அண்ணா மலையை யும் கைது செய்தார்.

    • மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஆடுகளை திருடி சென்று கொண்டிருப்பதை கண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
    • இதில் அவர்கள் திருடிய ஆட்டை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கறிக்கடையில் விற்றதும் தெரியவந்தது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளி சாவடி ப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (44). இவர் தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வருகிறார்.

    இவர் வீட்டில் ஏராள மான ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். ஆடு, மாடுகளை அதே பகுதியில் தனக்கு சொந்தமான தோட்ட த்திற்கு சென்று தினமும் காலை மேய்க்க விட்டு மாலை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம்.

    இதேபோல் நேற்றும் நந்தகுமார் ஆடு, மாடுகளை தோட்டத்தில் மேய்க்க விட்டிருந்தார். பின்னர் மதியம் நந்தகுமார் தோட்டத்திற்கு வந்து பார்த்த போது மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஆடுகளை திருடி சென்று கொண்டிருப்பதை கண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்த 2 பேரையும் நந்தகுமார் மடக்கி பிடித்தார். இது குறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (44), மற்றொருவர் ஊத்துக்குளி காங்கேயம்பாளையம் பகுதியை சேர்ந்த பூபதி (37) என்பதும் அவர்கள் ஆட்டை திருடி சென்றதும் ஒப்புக்கொண்டனர்.

    இதில் அவர்கள் திருடிய ஆட்டை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கறிக்கடையில் விற்றதும் தெரியவந்தது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    ×