செய்திகள்
முதல்வர் பழனிசாமி பேசிய காட்சி

குறுகிய காலத்தில் அதிக மருத்துவ இடங்கள்- முதல்வர் பழனிசாமி பேச்சு

Published On 2020-03-04 12:37 GMT   |   Update On 2020-03-04 12:37 GMT
குறுகிய காலத்தில் அதிக மருத்துவ மாணவர்கள் படிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது அதிமுக அரசு என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது. இதற்காக, போலுப்பள்ளியில் 25 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.348 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா போலுப்பள்ளியில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டிய பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 

குறுகிய காலத்தில் அதிக மருத்துவ மாணவர்கள் படிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது அதிமுக அரசு. தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகளை விட கூடுதல் வசதிகள் உள்ள மருத்துவமனையாக செயல்படும். எதிர்காலத்தில் மக்கள் தனியாருக்கு செல்வதை விட அரசு மருத்துவமனைக்கு வரும் சூழல் ஏற்படும் என்று கூறினார்.
Tags:    

Similar News