செய்திகள்
மாயம்

நெட்டப்பாக்கம் அருகே பள்ளி மாணவி மாயம்

Published On 2020-03-01 14:42 GMT   |   Update On 2020-03-01 14:42 GMT
நெட்டப்பாக்கம் அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேதராப்பட்டு:

நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் புதுகாலனி 3-வது தெரு வை சேர்ந்தவர் அழகர் (வயது35). கொத்தனார். இவரது மனைவி அய்யம்மாள் (34). இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்தமகள் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவி திடீரென காணவில்லை.

இதனால் அதிர்ச்சிஅடைந்த அழகர் தனது மகள் காணாததால் உறவினர் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் எங்கும் இல்லை. பின்னர் இதுகுறித்து அழகர் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரில் தனது மகளை எங்கள் ஊரை சேர்ந்த தானமுத்து என்பவரது மகன் வெங்கடேசன் (19)ஆசை வார்த்தைகூறி கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News