செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
ஆண்டிப்பட்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொன்னம்மாள் பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் அருண்குமார் என்ற அனீஸ் (வயது 30). சம்பவத்தன்று தனது சித்தப்பா வேலுச்சாமி வீட்டில் மாடியில் துணிகள் காய போட்டு இருந்தார். அதனை எடுப்பதற்காக அனீஸ் சென்ற போது தவறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.