செய்திகள்
மரணம்

திருவையாறில் வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலி

Published On 2020-02-28 11:04 GMT   |   Update On 2020-02-28 11:04 GMT
திருவையாறில் வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ரவி மகன் பூந்தை பூபதி (என்கிற) அப்பு (25) இவர் சொந்தமாக வைக்கோல் கட்டும் எந்திரம்வைத்துள்ளார்.

கீழத்திருப்பூந்துருத்தி ஐயனார் கோவில் அருகே கோரை வாய்கால்பக்கத்தில் உள்ள ஜான் என்பவர் வயலில் நேற்று எந்திரம் மூலம் அறுவடை செய்தவைக் கோல்களை கட்டுக் கட்டி கொண்டிருந்தனர். அப்போது கட்டுக்கட்டும் மிஷினில் இருந்த சணலை அப்பு எடுத்துவிடும் போது எதிர்பாரத விதமாக கை சிக்கி நசுங்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடனே அவரை திருவையாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே அப்பு இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து அவரது தந்தை ரவி (53) நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News