செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோகித்

காத்தவராயன் எம்எல்ஏ மரணம்- கவர்னர் அனுதாபம்

Published On 2020-02-28 07:10 GMT   |   Update On 2020-02-28 07:10 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ காத்தவராயன் மறைவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

காத்தவராயன் எம்.எல்.ஏ. மறைவு குறித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

காத்தவராயன் எம்.எல்.ஏ. மரண செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வாக 2019-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


காத்தவராயன் எம்.எல்.ஏ. மறைவு குடியாத்தம் தொகுதி மக்களுக்கு பெரும் இழப்பு. அவருடைய மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறவும், இந்த பெரும் இழப்பில் இருந்து மீண்டு வரும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு கொடுக்குமாறும் இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News