செய்திகள்
கோப்பு படம்

வயலில் சரக்கு ஆட்டோ பாய்ந்து விபத்து - பெண் உள்பட 2 தொழிலாளர்கள் பலி

Published On 2020-02-27 11:15 GMT   |   Update On 2020-02-27 11:15 GMT
கோவை அருகே சரக்கு ஆட்டோ வயலில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் பெண் உள்பட 2 தொழிலாளர்கள் பலியானார்.
கோவை:

கோவை காளியாபுரத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 55). சரக்கு ஆட்டோ உரிமையாளர்.

சம்பவத்தன்று பெருமாள்சாமி தனது ஆட்டோவில் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (56), பழனிச்சாமி (50) மற்றும் திருமலையாம்பாளையத்தை சேர்ந்த பழனியம்மாள் (55) ஆகிய 3 பேரையும் ஆட்டோவில் கட்டிட வேலைக்கு க.க.சாவடிக்கு அழைத்துச்செல்ல புறப்பட்டார். உடன் மணல், சிமெண்டு மூட்டைகளும் இருந்தன.

ஆட்டோ காளியாபுரம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த மாரிமுத்து, பழனிச்சாமி மற்றும் பழனியம்மாள் ஆகிய 3 ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை ஆம்புலன்சில் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் மாரிமுத்து, பழனிச்சாமியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பழனிச்சாமியும் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News