செய்திகள்
கைது

திருப்பரங்குன்றத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை-கணவர் கைது

Published On 2020-02-25 08:42 GMT   |   Update On 2020-02-25 08:42 GMT
திருப்பரங்குன்றத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை:

திருப்பரங்குன்றம் தேவி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது47). இவரது மனைவி நாகம்மாள் (33). சிவகங்கை மாவட்டம் இடையமேலூரைச் சேர்ந்த இவர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதில், கடந்த 2015-ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது 16 பவுன் நகையும், ரூ.5 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் முருகன் சித்ரவதை செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.

Tags:    

Similar News