செய்திகள்
மதுரை ஓட்டல் லிப்டில் சிக்கிய 7 பேர் மீட்பு
மதுரை ஓட்டல் லிப்டில் சிக்கிய 7 பேரை காயம் எதுவுமின்றி பத்திரமாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
மதுரை:
மதுரை ரெயில் நிலையம் எதிரே பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் தங்கி இருந்த 7 பேர் இன்று அதிகாலை லிப்டில் சென்றனர். அப்போது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட எடைக்கும் மேல் பயணிகள் சென்றதால் லிப்ட் நடுவழியில் நின்று விட்டது. இதனால் அதில் சென்ற 7 பேர் சிக்கி தவித்தனர்.
இதுதொடர்பாக மதுரை டவுன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு பயணிகளை லிப்டில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நடுவழியில் சிக்கிய லிப்டின் கதவுகளை உடைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் கதவை உடைத்தனர். அதன் பிறகு 7 பயணிகளும் லிப்டில் இருந்து காயம் எதுவுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மதுரை தனியார் ஓட்டலில் லிப்டில் 7 பேர் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை ரெயில் நிலையம் எதிரே பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் தங்கி இருந்த 7 பேர் இன்று அதிகாலை லிப்டில் சென்றனர். அப்போது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட எடைக்கும் மேல் பயணிகள் சென்றதால் லிப்ட் நடுவழியில் நின்று விட்டது. இதனால் அதில் சென்ற 7 பேர் சிக்கி தவித்தனர்.
இதுதொடர்பாக மதுரை டவுன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு பயணிகளை லிப்டில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நடுவழியில் சிக்கிய லிப்டின் கதவுகளை உடைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் கதவை உடைத்தனர். அதன் பிறகு 7 பயணிகளும் லிப்டில் இருந்து காயம் எதுவுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மதுரை தனியார் ஓட்டலில் லிப்டில் 7 பேர் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.