செய்திகள்
திண்டுக்கல் அருகே பைக் மீது லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி
திண்டுக்கல் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள அஞ்சுக்குழிப்பட்டி சோள குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 40) ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் வெள்ளைச்சாமி (30) தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வேம்பார்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது விறகு ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெள்ளைச்சாமிக்கு கால் முறிவு ஏற்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகிறார். பலியான அழகர்சாமிக்கு பஞ்சு என்ற மனைவியும், குமார், அருண், ஜெகதீஷ் ஆகிய மகன்களும் உள்ளனர்.
திண்டுக்கல் அருகே உள்ள அஞ்சுக்குழிப்பட்டி சோள குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 40) ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் வெள்ளைச்சாமி (30) தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வேம்பார்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது விறகு ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெள்ளைச்சாமிக்கு கால் முறிவு ஏற்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகிறார். பலியான அழகர்சாமிக்கு பஞ்சு என்ற மனைவியும், குமார், அருண், ஜெகதீஷ் ஆகிய மகன்களும் உள்ளனர்.