செய்திகள்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு - சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் இன்று ஒத்திவைத்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில், துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, பிப்ரவரி 17-ல் கூட்டத்தொடர் தொடங்கியது. பின்னர் பட்ஜெட் மீது பொது விவாதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு 4 நாட்கள் பரபரப்பாக நடந்த பட்ஜட் கூட்டத் தொடர் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.