செய்திகள்
விஷம்

வீடு கட்டுவதில் தகராறு: பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2020-02-20 10:13 GMT   |   Update On 2020-02-20 10:13 GMT
கோவை அருகே வீடு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை கணுவாய் அடுத்த சின்னதடாகம் மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 57). இவரது மனைவி பால் மாணிக்கம்(52). மாணிக்கம் கூலி வேலை செய்து வருகிறார்.

நேற்று கணவன், மனைவி 2 பேரும் புதிதாக வீடு கட்டுவது குறித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பால்மாணிக்கம் கணவரிடம் கோபித்து கொண்டு வரப்பாளையம் அடுத்த பொன்னூத்தம்மன் கோவில் அடிவாரத்திற்கு சென்றார். அங்கு தான் கொண்டு சென்ற வி‌ஷத்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதற்கிடையே மனைவி வெளியில் சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் மாணிக்கம் மனைவியை தேடி சென்றார். அப்போது பொன்னூத்தம்மன் கோவில் அடிவாரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த பால் மாணிக்கத்தை மீட்டு கோவைஅரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News