செய்திகள்
திருச்சியில் இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய பெண் புரோக்கர் கைது
திருச்சி ராஜா காலனியில் உள்ள பங்களா வீட்டு மாடியில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோடு ராஜா காலனியில் உள்ள பங்களா வீட்டு மாடியில் ஹைடெக் முறையில் விபசாரம் நடப்பதாக திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததுடன், விபசாரத்தில் ஈடுபடுபவர்களை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி விபசாரத்தில் ஈடுபடும் பெண் ஒருவருரிடம் வாலிபர் மூலம் பேச வைத்தனர். எதிர்முனையில் பேசிய அந்த பெண் , ராஜா காலனியில் செயல்பட்டு வரும் வீட்டு முகவரியை கூறி உல்லாசத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். போலீசார் அங்கு சென்று பார்வையிட்டபோது 2 பெண்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டப்பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி சாந்தி (வயது 40) என்பதும் , புரோக்கராக செயல்பட்டு வாலிபர்களை உல்லாசத்திற்கு செல்போனில் அழைத்ததும் தெரியவந்தது.
மற்றொருவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வாழைக்குறிச்சி மேலத் தெருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதில் சாந்தியை போலீசார் கைது செய்து காஜாமலையில் உள்ள காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் தொடர்ந்து சாந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே விபசாரத்தில் தள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட சாந்தி தற்போது அவரே இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார்.
இளம்பெண்கள் பலரை அவர் விபசாரத்தில் தள்ளியதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சாந்தி மீது வீட்டு உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.