செய்திகள்
சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்கவும்,கட்டுப்படுத்தவும் 6 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லைக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன், தேனிக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன், திண்டுக்கலுக்கு ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.