செய்திகள்
விபத்து பலி

திருச்சிற்றம்பலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2020-02-15 10:14 GMT   |   Update On 2020-02-15 10:14 GMT
திருச்சிற்றம்பலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள மடத்திக்காடு மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் மாஸ்டர் என்று அழைக்கப்படும் பெரியசாமி (வயது 71).

இவர் திருச்சிற்றம்பலம் அண்ணாநகரில் காய்கறிகள் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு வியாபாரம் செய்து விட்டு மடத்திக்காடு பிரிவு சாலை வேகத்தடை அருகே அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்று விட்டது.

இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த பெரியசாமிக்கு , பாப்பா என்ற மனைவியும் மகனும் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கர்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News