செய்திகள்
தற்கொலை

வாலிபர் தீக்குளித்து தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-02-11 10:32 GMT   |   Update On 2020-02-11 10:32 GMT
ஒரத்தநாடு அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேந்தன் (வயது 23). கேட்டரிங் படித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து வெற்றிவேந்தனின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெற்றிவேந்தன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேந்தன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News