கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி மாணவன்
கோவை:
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனது வீட்டின் அருகே 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி வசித்து வருகிறாள். அந்த சிறுமிக்கு காது கேட்காது. நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த மாணவன் தனது வீட்டின் எதிரே வசித்து வரும் அந்த சிறுமியை அந்த பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கிணற்றின் அருகே அழைத்து சென்றான். பின்னர் அங்கு அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தான். இதனால் அதிர்ச்சியான சிறுமி அலறி சத்தம் போட்டாள். அவளது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.
இதை பார்த்ததும் மாணவன் அங்கிருந்து தப்பிஓடிவிட்டான். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து கூறினாள்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து காட்டூர் போலீசில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.