செய்திகள்
தீவிபத்து

வெள்ளகோவில் அருகே தீ பிடித்து இளம்பெண் பலி

Published On 2020-02-10 09:32 GMT   |   Update On 2020-02-10 09:32 GMT
வெள்ளகோவில் அருகே தீ பிடித்து இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி விஜயா(வயது40). கணவன், மனைவி 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று ராமசாமி, அவரது மகன், மகள்கள் வெளியில் சென்றுவிட்டனர். விஜயா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென தனக்கு தானே தீ வைத்துள்ளார்.

இதில் தீ உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் விஜயா சத்தம் போட்டார்.

அவரது சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் விஜயாவின் உடலில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக விஜயா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு விஜயா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News