செய்திகள்
பொன்னேரி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
பொன்னேரியை அடுத்த கோளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 23). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சாந்தகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் இர்பான் ஷாகித் (35) மீஞ்சூரில் தங்கி அத்திப்பட்டு புதுநகரில் உள்ள துறைமுகத்தில் வேலை செய்து வந்தார். அவர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.