செய்திகள்
கோப்பு படம்

வாகன சோதனையில் நிற்காமல் போலீசாரை மிரட்டிய வேலூர் வாலிபர் கைது

Published On 2020-02-08 11:01 GMT   |   Update On 2020-02-08 11:01 GMT
கண்ணமங்கலம் அருகே வாகன சோதனையின் போது நிற்காமல் போலீசாரை மிரட்டிய வேலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் ஹேமாவதி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் நேற்று கொங்கராம்பட்டு கேட் மாரியம்மன் கோவில் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது அவ்வழியே மினி வேனை போலீசார் வாகனத்தணிக்கைக்கு நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வேன் டிரைவர் போலீசார் மீது மோதுவது போல் நிறுத்தாமல் சென்றார்.

தொடர்ந்து போலீசார் வாகனத்தில் சென்று துரத்தி பிடித்த போது, பணியிலிருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.மேலும் இச்சம்பவத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் லேசான காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக உதயகுமார் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News