செய்திகள்
சேத்துப்பட்டு அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
சேத்துப்பட்டு அருகே 17 வயது சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அருகே 17வயது சிறுமிக்கும், மேட்டுகுடிசை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் உத்தரவின்பேரில், சேத்துப்பட்டு ஒன்றிய ஊர்நல அலுவலர் விஜயா, சேத்துப்பட்டு போலீஸ்காரர் ரமேஷ் ஆகியோர் பெண் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி பெண்ணை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சேத்துப்பட்டு அருகே 17வயது சிறுமிக்கும், மேட்டுகுடிசை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் உத்தரவின்பேரில், சேத்துப்பட்டு ஒன்றிய ஊர்நல அலுவலர் விஜயா, சேத்துப்பட்டு போலீஸ்காரர் ரமேஷ் ஆகியோர் பெண் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி பெண்ணை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.