செய்திகள்
செந்தில் பாலாஜி வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்
சென்னை மந்தவெளியில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை மந்தவெளியில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சோதனை நடத்தப்பட்டது.
2011-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதில் பணம் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரிலேயே சோதனை நடந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மெமரி கார்டு, பென் டிரைவ் மற்றும் ரொக்கப்பணம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் என்னென்ன ஆவணங்கள் இருக்கிறது என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மந்தவெளியில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சோதனை நடத்தப்பட்டது.
2011-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதில் பணம் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரிலேயே சோதனை நடந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மெமரி கார்டு, பென் டிரைவ் மற்றும் ரொக்கப்பணம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் என்னென்ன ஆவணங்கள் இருக்கிறது என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.