செய்திகள்
விஷம்

மெஞ்ஞானபுரம் அருகே விவசாயி தற்கொலை

Published On 2020-02-06 10:43 GMT   |   Update On 2020-02-06 10:43 GMT
மெஞ்ஞானபுரம் அருகே குடும்ப பிரச்சனை தொடர்பாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஆரேஸ்பாண்டி (வயது 40), விவசாயி. இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மகன் கிருத்திக்ரோசனுக்கு (12) உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்த பிறகு குணமாகியது. இந்நிலையில் கிருத்திக்ரோசன் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளான். இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது.

இந்நிலையில் அவர் சம்பவத்தன்று தோட்டத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ஆரேஸ்பாண்டி உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News