செய்திகள்
கோத்தகிரி கூலி தொழிலாளி

திருமண வீட்டில் தவறி விழுந்து மூளைச்சாவு - கோத்தகிரி கூலி தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

Published On 2020-02-05 11:39 GMT   |   Update On 2020-02-05 11:39 GMT
கோவை அருகே திருமண வீட்டில் தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த கோத்தகிரி கூலி தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவா என்ற சிவப்பெருமாள் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (34). இவர்களுக்கு ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர். இவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று சிவா கட்டப்பெட்டில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். திருமண வீட்டின் மாடியில் இருந்த தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனினறி சிவா மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து சிவாவின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. சிவாவின் மனைவி காமாட்சி கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.

இதனையடுத்து இன்று மூளைச்சாவு அடைந்த சிவாவின் இருதயம், கல்லீரல், கிட்னி, கண்களை தானமாக பெற்றனர். பெறப்பட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது.
Tags:    

Similar News