செய்திகள்
தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை

Published On 2020-02-05 06:47 GMT   |   Update On 2020-02-05 06:47 GMT
ஊத்துக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் இளையரசன் (23). கூலி வேலை செய்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்தார்.

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இளையரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News