செய்திகள்
பாம்பு

காவேரிப்பட்டணம் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

Published On 2020-02-04 17:20 GMT   |   Update On 2020-02-04 17:20 GMT
காவேரிப்பட்டணம் அருகே நள்ளிரவு விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அடுத்த பனகமுட்லு அஞ்சல் குட்டிகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). விவசாயி. இவருக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. நேற்று இரவு விவசாய நிலத்திற்கு சென்றுவருவதாக சென்ற முருகன் நள்ளிரவு 1.30 மணிக்கு குட்டிகவுண்டனூர் கூட்டுரோட்டிற்கு அருகில் உள்ள மாந்தோப்பில் வந்துக்கொண்டிருந்தார். 
அப்போது இவரை பாம்பு கடித்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று முருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முருகனின் உடல் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவேரிப்பட்டணம் காவல்துறை இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Tags:    

Similar News