செய்திகள்
விபத்து

கோவை அருகே லாரி மோதி மூதாட்டி பலி

Published On 2020-01-24 11:11 GMT   |   Update On 2020-01-24 11:11 GMT
கோவை அருகே லாரி மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை போத்தனூர் அருகே உள்ள மேட்டூர் ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் அழகர் (70) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா (62). கணவன்-மனைவி இன்று காலை மொபட்டில் சென்றனர்.

போத்தனூரில் உள்ள ஜி.டி. டேங்க் ரோடு பகுதியில் சென்ற போது அந்த வழியாக சென்ற டேங்கர் லாரியை அழகர் முந்த முயன்றார். அப்போது திடீரென மொபட் மீது லாரி மோதியது.

இதில் பத்மா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. அவர் கணவர் கண் முன் சம்பவ இடத்திலே பலியானார். அழகர் லேசான காயம் அடைந்தார். விபத்து குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான பத்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News