செய்திகள்
கோப்பு படம்

சுவாமிமலை அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

Published On 2020-01-22 10:11 GMT   |   Update On 2020-01-22 10:11 GMT
சுவாமிமலை அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கியது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:

சுவாமிமலை அருகே அரசு நகர பேருந்து கும்பகோணத்தில் இருந்து கொத்தங்குடி சென்று கொண்டிருக்கும் போது நேற்று மாலை நீலத்த நல்லூரில் ஆட்டோவை டவுன் பஸ் முந்தி சென்றதால் ஆட்டோ ஓட்டுனர் இளஞ்செழியன் (வயது 34) என்பவர் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கினார்.

உடனே அரசு பேருந்து ஓட்டுநர் செழியன் என்பவர் சுவாமி மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர் இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News