செய்திகள்
முக ஸ்டாலின்

சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை மாற்றக்கூடாது- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Published On 2020-01-22 08:58 GMT   |   Update On 2020-01-22 08:58 GMT
சென்னையில் இருந்து அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை மாற்றக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை அதன் அமைவிடமான சென்னையில் இருந்து மாற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.





அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் நியாயமற்றது என்பதுடன் சென்னை மற்றும் தமிழக நலன்களுக்கு எதிரானது. இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

Similar News